'நீட்' தேர்வுக்கு எதிராக ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம்

'நீட்' தேர்வுக்கு எதிராக ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம்

மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை, 

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். 
இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி மாண வர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மாணவி அனிதா தற் கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது.

சென்னை ராயப் பேட்டை புதுக்கல்லூரி  மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதற்காக கல்லூரியில் இருந்து சாலைக்கு வந்தனர்.  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்கள் வெளியே வரமுடியாத படி கல்லூரி கேட்டை பூட்டு போட்டு 
பூட்டினர். இதனால் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் அமர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக   தகவல்  வந்ததை தொடர்ந்து  அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த  நிலையில்  மெரினாவில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா  நினைவிடத்திற்கு சென்ற இந்திய மாணவர்  சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரக்ள் அங்கு போடப்பட்டு இருந்த கம்பி வேலிகளை தாண்டி நினைவிடத்திற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம்  நடத்தினர். அவர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்